- காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாஷி
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாயம்மா
உன் அருள் என்றும் நிலை பெற வேண்டும்
நீ வருவாய் அம்மா
பொன் பொருள் எல்லாம் வளம் பெற வேண்டும்
வாழ்த்திடுவாய் அம்மா
ஏன் என்று கேட்டு என்பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயம்மா
நின்முகம் கண்டேன் என்முகம் மலராய்
மலர்ந்ததும் ஏனம்மா ?
மங்களம் வழங்கிடும் மகிமையைக் கண்டேன்
உன் திருக் கரத்தினிலே
எங்கும் வருவாய் என்னுயிர் நீயே
எங்கள் குல தேவி
சங்கடம் தீர்ப்பாய் பாக்களைத் தருவேன்
சங்கத் தமிழினிலே
தங்கும் புகழைத் தடையின்றித் தருவாய்
தயக்கமும் ஏனம்மா ?
பயிர்களை உள்ள பசுமையில் கண்டேன்
பரமேஸ்வரி உனையே
உயிர்களில் உள்ள உன்னருள் உண்மை
உலக மகா சக்தி
சரண் உன்னை அடைந்தேன் சங்கரி தாயே
சக்தி தேவி நீயே
அரண் எனக் காப்பாய் அருகினில் வருவாய்
அகிலான் டேஸ்வரியே…!!!
—-
2. இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடியைக் காண வந்தோம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரனம் அய்யப்ப சரணம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார்
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரனம் அய்யப்ப சரணம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
சரனம் சரனம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரனம் சரனம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரனம் சரனம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரனம் சரனம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரனம் சரனம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரனம் சரனம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா